மெத்­தைக்­குள் மறைத்து கஞ்சா கடத்தல்- கிளி­நொச்­சி­யில் சம்­ப­வம்!!

சூட்­சு­ம­மான முறை­யில் மெத்­தைக்­குள் மறைத்­துக் கடத்­தப்­பட்ட கஞ்சா கிளி­நொச்சிப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைப்­பற்­றப்­பட்­டது. அதே­ச­ம­யம் முச்­சக்­கர வண்டி ஒன்­றில் கடத்­திச் செல்­லப்­பட்ட கஞ்­சா­வும் கைப்­பற்­றப்­பட்­டது. சந்­தே­கத்­தில் 4 பேர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கிளி­நொச்­சி­யில் உள்ள புல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்­குக் கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் இந்­தக் கைது நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

நேற்று நண்­ப­கல் கிளி­நொச்சி, அம்­பாள்­கு­ளத்­தில் மெத்­தை­கள் ஏற்­றிச் சென்ற வாக­னம் ஒன்றை மறித்­துப் பொலி­ஸார் சோத­னை­யிட்­ட­னர். மெத்­தைக்­குள் சூட்­சு­ம­மான முறை­யில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கஞ்சா பொலி­ஸா­ரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பின்­னர் அந்­தப் பகு­தி­யில் சோதனை மேற்­கொண்­ட­போது, அங்கு தரித்­து­நின்ற முச்­சக்­கர வண்­டி­யில் இருந்­தும் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

விசு­வ­ம­டுப் பகு­தி­யில் இருந்து முச்­சக்­கர வண்­டி­யில் கடத்­தி­வ­ரப்­பட்ட இந்­தக் கஞ்சா கிளி­நொச்­சி­யில் வைத்து மெத்­தைக்­குள் சூட்­சு­மாக மறைக்­கப்­பட்­டன. இவை பொலன்­ன­று­வைக்­குக் கடத்­தப்­ப­ட­வி­ருந்­தன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் இரு­வர் கிளி­நொச்சி, அம்­பாள்­கு­ளத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும், ஒரு­வர் குரு­ணா­க­லைச் சேர்ந்­த­வர் என்­றும், மற்­றை­ய­வர் கண்­டி­யைச் சேர்ந்­த­வர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இரு வாக­னங்­க­ளில் இருந்­தும் தலா இரண்டு கிலோ­கி­ராம் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது.

இது தொடர்­பான விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­றும், விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சந்­தே­க­ந­பர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் கிளி­நொச்­சிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.