சமையல் எரிவாயு விலை உயர்வு!

சமையல் எரிவாயுவின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், வாழ்க்கை செலவுகள் குழு முன்வைத்த யோசனை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (18) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சமையல் எரிவாயுவின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதை காரணம் காட்டி., சமையல் எரிவாயு நிறுவனங்கள், விலையை அதிகரிக்க கோரி வாழ்க்கைச் செலவுகள் குழுவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.