இலங்கையில் மீண்டும் நில அதிர்வு! அதிரச்சியில் மக்கள்

இலங்கையின், பதுளை, ஹாலி-எல நகரத்தில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

அந்த பிரதேச மக்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டது.

எனினும், அவ்வாறான நில அதிர்வு எதுவும் பதுளையில் பதிவாகவில்லை என்று புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வாரமும் திருகோணமலையின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேச மக்களால் முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னரே புவிச்சரிதவியல் திணைக்களம் அதை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.