சுழிபுரம் சிறுமி கொலை வழக்கு ; 2 வது சாட்சியாளரிடம் சாட்சிப் பதிவு

யாழ்ப்பாணம் சுழிபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ரெஜினாவின் கொலை வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.

மல்லாகம் நீதவான் நீதீமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் இன்று மூடிய அறையில் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவித்த நீதவான் அன்றைய தினம் வரை வழக்கை ஒத்திவைத்தார்.