யாழில் சற்றுமுன்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வாள் முனையில் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 18 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.