பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களை 5 நிமிடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் சேவை, பத்தரமுல்லைபதிவாளர் நாயகம் அலுவலகத்தில், நேற்று தொடக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமைச்சர் வஜிரஅபேவர்தன தலைமையில் இதற்கான இரண்டு சிறப்பு கருமபீடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

நாட்டின் எந்தவொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களை, 5 நிமிடங்களுக்குள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.