கடற்கரையில் கரையொதுங்கிய அதிசய உயிரினம்….!!

நியூசிலாந்து கடற்கரையில், கரை ஒதுங்கிய உயிரினம் ஒன்று, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட, அடாம் டிக்கின்சன் என்னும் நபர் கடல் கரைக்குச் சென்றவேளை. அங்கே கரை ஒதுங்கிய இந்த உயிரினத்தை பார்த்தால் ஏலியன் போலக் காணப்படுகிறது என விபரித்துள்ளார்.

உடனே புகைப்படம் எடுத்து இணையத்தில் தரவேற்றியுள்ளார். பல மில்லியன் மக்கள் இதனை கண்டு, தாம் பூமியில் இது போன்ற ஒரு உயிரினத்தை இதுவரை கண்டதே இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இது இவ்வாறு இருக்க, நியூசிலாந்தை சேர்த்த உயிரியல் விஞ்ஞானிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்கள்.