இன்றைய ராசிபலன் 22-09-2018

மேஷம்: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் சில சங்கடங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

ரிஷபம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேற்றுமை நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார் கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படக்கூடும். இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருக்காக சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்: அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். தந்தை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் பணவரவுக்கான வாய்ப்பு உண்டு.

கன்னி: அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். பிற்பகலுக்கு மேல் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படுமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

துலாம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பிற்பகலுக்கு மேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் முற்பகலில் சில செலவுகள் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் வியாபாரம் அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும்.

விருச்சிகம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு: காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

மகரம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக அமையும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு எதுவுமிருக்காது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக் கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன்கள் விஷயத்திலும் கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் செய்யாமல் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனையும் ஆதரவும் பயனுள்ளதாக இருக்கும்.

மீனம்: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பயணத்தின்போது கைப்பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். சிலருக்கு குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்த னைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.