யாழில் அரை மணி நேரத்தில் குடும்பம் ஒன்றுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வீட்டுக் கதவை உடைத்து அரைமணி நேரத்தில் 22 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு, சுழிபுரம் பண்ணாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த அன்று இரவு 6 மணி முதல் 6.30 மணிவரை வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்றிருந்தனர்.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்களைத் தேடியபோது 22 பவுண் நகைகள் திருட்டுப் போனது கண்டறியப்பட்டது.

வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.