இன்று நள்ளிரவு(26) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு..

இன்று நள்ளிரவு(26) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக சமையல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5Kg வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு(26) முதல் ரூபா.195 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் ரூபாவின் மதிப்பு வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இவற்றை கவனத்தில்கொண்டு சமையல் எரிவாயு விலையை 323 ரூபாவால் அதிகரிக்க வேணடும் என சமையல் எரிவாயு நிறுவனங்கள் வாழ்க்கைச் செலவு குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எனினும் வாழ்க்கைச் செலவுக் குழு அதனை ரூபா 195 இனால் அதிகரிப்பதற்கு பரிந்துரை செய்ய, அண்மையில் அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.