மகனுடன் ஏற்பட்ட கோபம் – தாய் தற்கொலை….

கிங் கங்கையில் பாய்ந்து தாயொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வென்னப்புவு, தும்மலதெனிய பிரதேசத்தில் கிங் ஓய பாலத்தில் இருந்து குதித்து குறித்த தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு தும்மலதெனிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான தாய் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தற்கொலை செய்து கொண்டவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.