விளையாட்டு மைதானத்தில் வாளுடன் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளைஞன்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் வாளுடன் வந்த நபர் அங்கிருந்த வீரர்களை அச்சுறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரை நீதிமன்றில முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.