தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றி எரிந்த வேன்!

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வேன் வாகனமொன்றில் இன்று மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பத்தேகம , குருந்து கஹா நுழைவாயிற்கருகில் 72 வது கிலோமீற்றர் தூண் அருகில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீயினால் குறித்த வேன் வாகனம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

இவ்வாறு எரிந்துள்ள வேன் வாகனம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் , சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

தற்போதைய நிலையில் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.