இலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…! (படங்கள்)

இலங்கைக்கு சுற்றுலா பயணம மேற்கொண்டுள்ள வெளிநாட்டு யுவதி ஒருவர் இலங்கையர்களுக்கு சிறந்த பாடம் ஒன்றை புகட்டியுள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளிலுள்ள ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த குப்பைகளை, வெளிநாடு யுவதி ஒருவர் தனியாக துப்பரவு செய்து வருகிறார்.

இலங்கையர்கள் பொறுப்பற்ற வகையில், குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதன் மூலம் சூழலைக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.

எனினும், வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர், நாட்டின் அழகை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இது ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தலை குனிய வைத்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டி பதிவுகள் இடப்பட்டுள்ளன.