பொகவந்தலாவை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (24) பிற்பகல் பொகவந்தலாவை – மோரா தோட்டத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த பெண்கள் ஐவரே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்குட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.