6 வயது சிறுவனுக்கு மாமா செய்த கொடூரம்! வவுனியாவில் சம்பவம்

6 வயது சிறுவன் ஒருவரை வயரால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கல்வி கற்கவில்லை என்ற காரணத்துக்காக இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் கிரிசுட்டகுளம், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 06 வயதுடைய சிறுவனே காயமடைந்துள்ளார்.

பெற்றோர் அற்ற நிலையில் சிறுவனை மாமனே கவனித்து வந்துள்ளார் இந் நிலையில் வீட்டில் கல்வி கற்கவில்லை என்கின்ற காரணத்தினால் வயரால் தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸாரும், சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.