புதிய அமைச்சரவை குறித்து மைத்திரி – மகிந்த பேச்சு

நடைமுறையிலிருந்த அமைச்சரவை அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ள நிலையில் புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.