நாட்டின் புதிய பிரதமரை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் உதயராசா!

நேற்றைய தினம் ஆசியாவே வியந்த வகையில் இலங்கை அரசியலில் எதிர்பாராத விதமாக இலங்கையின் புதிய பிரதமராக முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்

இதனையடுத்து நாட்டில் உள்ள மகிந்த ஆதரவு மக்கள் அனைவரும் கொண்டாட்டமாக கொண்டாடி வரும் நிலையில் பல கட்சி தலைவர்களும் புதிய பிரதமருக்கு வாழ்த்துச்செய்தி தெரிவித்து வரும் வேளையில் சிறிதமிழீல விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன்

எதிர்காலங்களில் நாட்டின் சிறந்த அபிவிருத்திக்கும் இன ஒற்றுமைக்குமான பிரதமரின் செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார்