மைத்திரிக்கு கடிதம் அனுப்பிய ரணில்

நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், தான் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிக்க போவதாக ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சற்று முன்னர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி அவருக்கு அனுப்பியிருந்த கடித்ததிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.