புதிய பிரதமரான மஹிந்தவுக்கு புதிய செயலாளர் நியமனம்

புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளராக சிறிசேன அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளர் விசேட ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இதில் கருத்து தெரிவிக்கும் போது,

அரச அதிகாரிகளுக்கு அவர்களது கடமைகளை செய்வதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமரின் செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.