யாழில் எரிபொருள் நிரப்ப முண்டியடிக்கும் பொது மக்கள்….

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றனர்


யாழ் நகரிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதைய நிலவரப்படி மோட்டார் சைக்கிளிற்கு 300 ரூபாய்க்கு மேல் பெற்றோல் நிரப்புவதை நிறுத்திவருகின்றனர் கார்கள் உள்ளிட்ட வாகனங்களிற்கும் அதற்கு தகுந்தாற்போல் மட்டுப்படுத்தப்பட்டே எரிபொருள் வழங்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது