சிறுவனை வயரினால் தாக்கிய மாமனார் – கனகராயன்குளத்தில் கொடுமை

தனது மாமனாரினால் தாக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஒருவன் முல்லைத்தீவு- மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். படிக்கவில்லை என்ற காரணத்திற்காகவே, அனது மாமனார் வயரினால் தாக்கியுள்ளார்.

கிரிசுட்டகுளம், கனகராயன்குளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி கினுஜன் (06) என்ற சிறுவனே பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அற்ற நிலையில் மாமனாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். வீட்டில் கல்வி கற்கவில்லை என்கின்ற காரணத்தினாலேயே மாமனார் வயரினால் தாக்கியுள்ளார். பலமான காயங்களிற்கு உள்ளான சிறுவன், மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் குறித்து, கனகராயன்குளம் பொலிசார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளின் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.