வீதியில் பயணித்த பாதசாரியும் பலி: உந்துருளி செலுத்துனரும் பலி

கொழும்பு – காலி பிரதான வீதியில் மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

எகொடஉயனவில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த உந்துருளி, வீதி ஊடாக பயணித்த பாதசாரி மீது மோதி நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பாதசாரி மற்றும் உந்துருளி செலுத்துனரும் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

48 வயதான பாதசாரியும், உந்துருளியை செலுத்திய 21 வயதான இளைஞருமே விபத்தில் பலியாகியுள்ளனர்.