இன்னும் சற்று நேரத்தில் வெல்வாரா மஹிந்த?

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் தமக்கு இருப்பதாகக் கூறபடும் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு முன்னால் மக்கள் ஆதரவையும் காண்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்லது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள ´மக்களின் மகிமை´ எனும் தொனிப்பொருளில் அமைந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று மதியம் இடம்பெறவுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு உள்ள மக்கள் சக்தியினை வெளிப்படுத்துமுகமாக இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று மதியம் 12 முதல் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாராளுமன்றத்தில் ரணில் மற்றும் மஹிந்த தரப்பினர்க்கான பெரும்பான்மையினை நிரூபிக்குமுகமாக எதிர்வரும் 14ஆம் நாள் பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.