கிளிநொச்சியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற இரு சிறுவர்கள் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்றுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 15 வயதுடைய சிறுவனுடன் மற்றுமொரு சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.