மைத்திரியை தவிர்த்து மகிந்தவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத கவசம்!

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச குண்டு துளைக்காத கவசம் அணிந்து வந்திருந்தார்.

பிரதமர் மகிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகியோர் தலைமையில் அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில் கொழும்பில் இன்று மக்கள் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

“மக்கள் மகிமை” என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி போராட்டம் நாடாளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் கொட்டும் மழைக்கு மத்தியில் மகிந்த அணி உறுப்பினர்களும், பொது மக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த பேரணில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச குண்டு துளைக்காத கவசம் அணிந்திருந்தார்.

குறித்த பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்த போதிலும், பிரதமர் மகிந்த ராஜபக்ச மாத்திரம் குண்டு துளைக்காத கவசம் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.