இரு வேறு இடங்களில் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் நோட்டன் – தெபட்டன் தோட்டப் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட தோட்டக் குடியிருப்பு பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது ஒருவர் மற்றைய நபரைக் கத்தியால் குத்தியுள்ளதாகவும், இதனால் பலத்த காயமடைந்த நபர், டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

38 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவானிடம் இன்று முன்னிலைப்படுத்துவதற்கு நோட்டன் பிரிட்ஜ் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குயின்ஸ்பெரி கீழ் பிரிவில் உள்ள கிளை ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்றையதினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதே தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்தபான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.