மகிந்தவின் சகோதரருக்கு சற்று முன்னர் முக்கிய அமைச்சு பதவி வழங்கி வைப்பு!

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச சற்று முன்னர் சுகாரதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு அந்த பதவிக்கு மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

இதனால் கொழும்பு அரசியலில் இன்று வரையிலும் குழப்பம் தொடர்ந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையும் கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் கடந்த சில தினங்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச சற்று முன்னர் சுகாரதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், எஸ்.பி.திசநாயக்க, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளனர்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக வைத்தியர் ராஜிா சேனாரட்ன செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.