மீதோட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழத்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி.

மீதோட்ட முல்ல குப்பை மேட்டு சரிவின் போது உயிரிழந்த 30 ற்கும் மேற்பட்ட உறவுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைகழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஐந்து நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமான அஞ்சலி நிகழ்வில் அச்சலி உரைகளும் மலர்வணக்கம் இடம்பெற்றதோடு உயிரழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது .அச்சலிஉரைகளை கலைப்பீட மாணவர் ஒன்றியதலைவர், மற்றும் கலைப்பீட பீடாதிபதி ஆகியோர் ஆற்றினர்….