மைத்திரியின் மாளிகைக்கு முன்னால் அப்பத்துடன் படையெடுக்கும் மக்கள்?

ஜனநாயகத்தை உறுதி செய்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறுகோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணி ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கின்றது.

ஐக்கியதேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தோரும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்னால் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகமூடியை அணிந்து அனைவருக்கும் அப்பம் வழங்கியமை முகநூல் உள்ளிட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிடம் மைத்திரிபால சிறிசேன வருவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அப்பம் சாப்பிட்டதாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.