நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை உறுதி செய்கிறார் மகிந்த

இலங்கை நாடாளுமன்றம் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பிபிசி சிங்கள சேவையிடம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சற்று முன்னர் இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.