இதுவே சரியான வாய்ப்பு! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் மகிந்த கூறிய கருத்து

தலைவர் என்ற வகையில், எதிர்கால இலங்கையின் மீது மக்களின் நிலைப்பாட்டையும், கருத்துகளையும் முன்வைப்பது தமது கடமை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தல் மக்களின் விருப்பம் மற்றும் நிலையான நாட்டிற்கு வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி கையொப்பமிட்டு வர்த்தமானி அறிவித்தள் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கொழும்ப அரசியல் பரபரப்பு அடைந்துள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.