ரணில் விடுத்த கோரிக்கை! முடியாது என்றார் மைத்திரி

ரணிலின் கருத்திற்கு உடன்படபோவதில்லையென, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால விறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயார் என, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டீ.ஜே.செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாரென, ரணில் விக்கிரமசிங்க த இந்து பத்திரிகைக்கு தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது