கடலில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு

கிண்ணியா பாலத்திற்கு கீழ் தூண்டில் மூலம் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கிண்ணியா 3 பிரதான வீதியை சேர்ந்த யாக்கூப்ஹாரி முஹீத் என்ற 18 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கிண்ணியா பாலத்திற்கு கீழே உள்ள தூணில் தூண்டலில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக இளைஞன் கடலில் விழுந்துள்ளார்.

இதனை அடுத்து இளைஞனை தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்த வேளையில் இன்று மாலை தோனா பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலத்தை இன்று கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்ய உள்ளதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.