நாடாளுமன்றத்தில் தலைதெறிக்க ஓடிய மஹிந்த!

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் இன்றைய தினம் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பிலான வாக்கெடுப்பினை நடாத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய முயற்சித்தார்.

எனினும் நாடாளுமன்றில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆளும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாத குழப்ப நிலையைத் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை வரை நாடாளுமமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.