நாடாளுமன்றத்தை போர்க்களமாக மாற்றிவிட்டு அமைதியாக சென்ற மஹிந்த, வேடிக்கை பார்த்த ரணில்!!

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என தெரிவித்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை முற்றுகையிட்ட மஹிந்த அணியினர் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபாநாயகரின் ஆசனத்தை சுற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டதுடன், மஹிந்த அணியினரை நெருங்க விடாமல் பாதுகாத்தனர்.

இந்த நிலையில், சபாநாயகரின் மேசையில் இருந்த அனைத்து பொருட்களையும் மஹிந்த ஆதரவாளர்கள் தட்டிவிட்டதுடன், சண்டையிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலை மோசமடைந்த நிலையில் சபாநாயகர் தமத ஆசனத்தை விட்டு எழுந்து சென்றிருந்தார்.

மேலும், மஹிந்தவும் தமது ஆசனத்தை விட்டு எழுந்து மெதுவாக வெளியேறினார். இத்தனை குழப்பங்களையும் ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரணில் சற்று நேரம் அமர்ந்து இருந்து விட்டு அவரும் எழுந்து சென்றார்.

இந்த நிலையில் “தப்பி ஓடிவிட்டார்” என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கூச்சலிட்டு தற்போது நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.