சண்டியர்களின் கூடாரமாக மாறிய நாடாளுமன்றம்! சபாநாயகர் ஆசனத்தை கைப்பற்றிய மஹிந்த தரப்பு

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்த வேளையில் அங்கு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்றம் கூடிய சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் செயற்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசனத்தை மஹிந்த தரப்பு கைப்பற்றியுள்ளது. அந்த ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ அமர்ந்துள்ளார்.

இதன் காரணமாக சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தேவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது கத்தியுடன் தாக்குதல் நடத்த பாலித்த முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.