திருகோணமலையில் நஞ்சருந்திய நபர் உயிரிழப்பு

திருகோணமலை, சேருநுவர பகுதியில் வயோதிபர் ஒருவர் நேற்றிரவு நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சேருநுவர RB 2 பகுதியை சேர்ந்த ரத்னாயக்க முதியன்சலாகே சிறிசேன (63 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே இவர் நஞ்சறுந்தியுள்ளதாகவும், அதனை அடுத்து அருகில் உள்ள சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சேர்த்த போதும் அங்கு வைத்தியர் இல்லாமையினால் மீண்டும் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது நஞ்சருந்திய நபர் உயிரிழந்துள்ளதாக அவரின் மனைவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.

அத்துடன் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.