ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சைகளை நடாத்தி புள்ளிகளை பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான நான்காவது மாதிரிப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி ( 28.04. ) வெள்ளிக்கிழமை பி.ப.1.00 மணிக்க பாடசாலைகளில் நடாத்தவுள்ளனர்.

ஏற்கனவே மூன்று மாதிரிப் பரீட்சைகள் சனிக்கிழமைகளில் நடாத்தப்பட்டதெனவும் நான்காவது பரீட்சை வெள்ளிக்கிழமை நடாத்தப்படவுள்ளதெனவம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கான வினாத்தாள்களை அந்தந்த வலயங்களில் பெற்றுக் கொள்ளலாமென மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் அறிவித்துள்ளார்