சபாநாயகருக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்றத்தில் முறைப்பாடு

எதிர்காலத்தில் சர்வதேச நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாடு தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு சிக்கலுக்கு முக்கிய காரணம் சபாநாயகர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்து கொள்ளவில்லை. எனினும் பிரதி சபாநாயகர் நாடாளுமன்றதை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.