மகனைக் கடித்து குதறிய தந்தை! யாழில் அதிர்ச்சி சம்பவம்

தந்தையின் கடி காயங்களுக்கு இலக்கான 5 வயதுச் சிறுவன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதை தலைக் கேறிய தந்தையே சிறுவனைக் கடித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவன் கை , முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

முறைப்பாட் டைப் பதிவு செய்த சுன்னாகம் பொலிஸார் தந்தையைக் கைது செய்தனர். விசாரணைகளில் போதையே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசரணைகளின் பின்னர் இன்று அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது என்றும், தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.