வவுனியா A9 வீதியில் கடை உடைத்து திருட்டு!

வவுனியா, ஏ9 வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்தினை நேற்று திறப்பதற்காக சென்றிருந்த வேளையில் குறித்த நிலையம் உடைத்து பொருட்கள் திருடப்பட்டுள்ளதை அறிந்த உரிமையாளர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வர்த்தக நிலையத்திலிருந்து தொலைபேசி, மீள்நிரப்பு அட்டை, சிகரெட் என்பன களவாடப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்தடன் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை வழங்க முடியுமென வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.