இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கறுப்பு மழை!

இலங்கையின் வெலிகந்த பிரதேசத்தில் கறுப்பு நிறத்தில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகந்த, ருவன்பிட்டிய உட்பட கிராமங்கள் சிலவற்றில் உட்பட பல பிரதேசங்களில் இவ்வாறு கறுப்பு மழை பெய்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 3.00 – 5.00 மணிக்கு இடையில் இந்த கறுப்பு மழை பெய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்களினால் நிரப்பப்பட்ட பாத்திரங்களில், இந்த கறுப்பு மழை நிரம்பியுள்ளது.

அத்துடன் நேற்று காலை முதல் வெலிகந்த பிரதேசத்தில் மழை பெய்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.