யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜேர்மன் தம்பதி!

தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜேர்மன் தம்பதி ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு இன்று காலை 8 மணியளவில் சென்றுள்ளனர்.

இதில் தாமக்கும் சுடரேற்றுவதற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சுரரேற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

தாயக உறவுகளுக்கு கடல் கடந்து வந்து அஞ்சலி செலுத்திய இந்த தம்பதி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.