மஹிந்தவின் திடீர் நடவடிக்கை!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மகசின் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கூட்டுப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கூட்டுப் படைகளின் பிரதானி நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவா நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவரது பிணை கோரிக்கையும் நீதவானால் நிராகரிக்கப்பட்டதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ அவரைச் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.