அலரி மாளிகைக்கு அவசரமாக சென்று ரணிலை சந்தித்த சுமந்திரன்!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நிறைவடைந்த பின்னர் அலரி மாளிகைக்கு சென்ற சுமந்திரன், ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பின் போது பேசிய விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தின் 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நிறைவடைந்த நிலையில், அலரி மாளிகைக்கு சென்ற சுமந்திரன் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.