ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் மைத்திரி? அவரே தெரிவித்துள்ள விடயம்

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ச்சி வசப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும்,

இன்றைய தேசிய நெருக்கடி;

ஜனாதிபதி சிறிசேன, நேற்றைய ஐ.தே.மு கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது உணர்ச்சி வசப்பட்டு, தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாட்டுக்கு உரையாற்றிவிட்டு, ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது பொலொன்னறுவை பண்ணைக்கு செல்வேன் எனவும் கூறினார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.