கவலையீனத்தால் காலை இழந்த யாழ் இளைஞன்……!!கோர விபத்தில் சம்பவம்… யாழில் நேற்று நடந்த சோகம்….!!

யாழ் கே.கே எஸ் வீதியில் நேற்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் தனது காலை இழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது ..

யாழ் மல்லாகம் கே.கே எஸ் வீதியில் இன்று காலை 9 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட உந்துருளி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதனால் உந்துருளியும் முச்சக்கர வண்டியும் வீதியில் சரிந்து வீழ்ந்ததுடன் உந்துருளியில் பயணித்த இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளாகி, தனது வலது காலை இழந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக யாழில் சாரதிகளின் கவலையீனத்தினால், நாளுக்கு நாள் இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன், பெறுமதியான உயிர்களும் காவு கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.