நீதிமன்ற தீரப்பிற்கு அமைய எதிர்கால அரசியலை முன்னெடுப்பேன்! ஜனாதிபதி

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கமைய எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகளின் தீர்ப்பு இந்த வாரம் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.