ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடப்பார் என்று நம்புகிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
குறித்த தீர்ப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, ரணில் விக்ரமசிங்க, மக்களின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் எனவும் காட்டமான அறிவுறுத்தல் ஒன்றையும் விடுத்துள்ளார்.